/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு
/
கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு
கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு
கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு
ADDED : பிப் 15, 2025 02:36 AM
வேலுார்:ஓடும் ரயிலில், கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது, போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையிலிருந்து, திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த, 6ம் தேதி பயணம் செய்த, 36 வயது கர்ப்பிணி பெண்ணை, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ், 28, என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக, ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் சிசு இறந்தது.
இதை தொடர்ந்து, ஹேமராஜ் மீது பிறக்காத குழந்தையை கொன்றதாக, மேலும் ஒரு வழக்கை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.

