ADDED : மார் 10, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, பசுமாத்துாரைச் சேர்ந்தவர் காந்தி, 59; போலீஸ்காரர் இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் பணிபுரிந்த காந்தி, 2024 செப்டம்பரில் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆறு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், நேற்று காலை, 8:30 மணியளவில் போலீஸ் குடியிருப்பில் இருந்து பணிக்கு கிளம்பிய போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காந்தி இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.