sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது

/

மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது

மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது

மதமாற்றம் செய்ய முயற்சி கிராம பாதிரியார் கைது


ADDED : ஏப் 27, 2024 01:39 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சின்னதோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ பாதிரியார் பாபு, 54. இவருக்கு சொந்தமாக கீழ்பட்டி கிராமத்தில், 5 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சர்ச் கட்டும் பணிக்காக, ஆட்களை வைத்து சுத்தம் செய்தார். அப்போது, அருகில் இருக்கும் பொது இடத்தையும் சேர்த்து சுத்தம் செய்தனர்.

மேலும், அந்த இடத்தில் பொதுமக்கள், தினமும் பால் ஊற்றி பூ வைத்து வழிபாடு செய்து வந்த பாம்பு புற்றையும் சேர்த்து சுத்தம் செய்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, 54, என்பவர் தட்டி கேட்டார். அப்போது கிறிஸ்துவ பாதிரியார் பாபு, அவதுாறாக பேசி, மதம் மாற சொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சரஸ்வதி, மேல்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் பாபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us