sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

 பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

/

 பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

 பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

 பாறை ஓவியங்களை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : ஜன 02, 2026 01:49 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சென்றாயன்பள்ளியில், கோழிக்கொண்டை மலை உள்ளது. இந்த மலையின் கிழக்கு பகுதியில் உள்ள பெரிய பாறை அருகே சிறிய குகை உள்ளது.

இந்த பாறையில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய, 20க்கும் மேற்பட்ட வெண் சாந்து ஓவியங்கள் உள்ளன. குறிப்பாக இரு கைகளால் வீரன் காளையின் திமிலை அடக்குவது போன்ற ஓவியம் உள்ளது. வட ஆற்காடு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு குறித்து கிடைத்துள்ள ஓவியங்களில் இது குறிப்பிடத்தக்கது.

இதன் வரலாற்று பெருமைகளை அறியாமல், சிலர் தங்கள் பெயர்களை பாறையில் கிறுக்கி வைத்துள்ளனர். இதை பாதுகாக்க, தொல்லியல் துறை சார்பில் அந்த குகை ஓவியங்கள் உள்ள பகுதியில் வேலியிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us