sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

அ.தி.மு.க., யாரையும் சார்ந்தில்லை வேலுாரில் பழனிசாமி ஆவேச பேச்சு

/

அ.தி.மு.க., யாரையும் சார்ந்தில்லை வேலுாரில் பழனிசாமி ஆவேச பேச்சு

அ.தி.மு.க., யாரையும் சார்ந்தில்லை வேலுாரில் பழனிசாமி ஆவேச பேச்சு

அ.தி.மு.க., யாரையும் சார்ந்தில்லை வேலுாரில் பழனிசாமி ஆவேச பேச்சு


ADDED : பிப் 17, 2025 01:10 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: ''அ.தி.மு.க., யாரையும் சார்ந்தில்லை; எங்களை நாடித்தான் எல்லாரும் வருவர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை மண்டல மாநாடு, வேலுார் கோட்டை மைதானத்தில் 'இலக்கு - 2026' என்ற தலைப்பில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பழனிசாமி பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., குரலை அ.தி.மு.க., ஒலிப்பதாக பேசுகிறார். நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. எங்களை நாடித்தான் எல்லாரும் வருவர். நாங்கள் தேர்தல் சமயத்தில் ஓட்டுகள் சிதறாமல் இருக்க, கூட்டணி அமைக்கிறோம். அ.தி.மு.க., மக்களை நம்பியுள்ள கட்சி. தி.மு.க., கூட்டணியை நம்பியுள்ள கட்சி.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க.,வின், 39 எம்.பி.,க்கள் நிதி பெற லோக்சபாவில் அழுத்தம் கொடுக்கவில்லை.

மத்திய அரசு தமிழகத்தில் ஆளுங்கட்சியை பார்க்க வேண்டாம்; ஏழை மக்களை பார்த்து, நுாறு நாள் வேலை திட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அனைவரும் தன்னை, 'அப்பா' என அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் தான் அதிகளவில் இளம் சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அப்போது, இளம்பெண்களும், சிறார்களும், 'அப்பா, அப்பா' என, கதறுவது, முதல்வர் காதில் கேட்கவில்லையா?

தமிழகத்தில், 2025 ஜன., 1 முதல், பிப்., 14 வரை, 107 போக்சோ வழக்குகளும், பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளதாக 56 வழக்குகளும் பதிவாகி உள்ளன. தி.மு.க., பதவிக்கும், அதிகாரத்திற்கும் வர அடிக்கடி நிறம் மாறும் கட்சி. கூட்டணி வேறு, கொள்கை வேறு. 2026 சட்டசபை தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திப்போம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.






      Dinamalar
      Follow us