sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

 அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

/

 அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

 அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

 அரசு பஸ் மோதி விபத்து கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு


ADDED : நவ 13, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 13, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணியம்பாடி: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் காங்கோஜி. இவர், வேலுார் அடுத்த கணியம்பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுமித்ரா, 23. இவர்களுக்கு மோனாஸ்ரீ, 4, என்ற பெண் குழந்தை உள்ளது.

காங்கோஜி, குடும்பத்துடன் வேலுார் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்தார். சுமித்ரா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக சென்றார்.

காங்கோஜி அண்ணன் மகன் ரிஷி, 22, டூ -வீலரில் சுமித்ராவை அழைத்து சென்றார். இவர்களுடன், மோனாஸ்ரீ, காங்கோஜியின் அண்ணன் மகள் மோனிகா, 14, ஆகியோரும் சென்றனர்.

வேலுாரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில், கணியம்பாடி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து வேலுார் நோக்கி வந்த அரசு பஸ், டூ - வீலரின் பின்பக்கம் மோதியது. இதில், சுமித்ரா, அவரது வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்தார். இரு சிறுமியர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us