/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
1,000 பேரிடம் மோசடி செய்தவர்கள் தலைமறைவு
/
1,000 பேரிடம் மோசடி செய்தவர்கள் தலைமறைவு
ADDED : ஜன 10, 2025 02:26 AM
வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் டவுனைச் சேர்ந்தவர் வரதராஜ், 65; ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர். இவரது மகன் பிரபு, 43. இருவரும், 'ஸ்ரீயோகாஷ்னா டிரேடர்ஸ்' என்ற பெயரில் கடை நடத்தினர். கடந்த, எட்டு ஆண்டுகளாக, மாத ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, பொங்கல் அரிசி சேமிப்பு திட்டம் என பல திட்டங்களில் சீட்டு நடத்தி வந்தனர்.
பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் மூலம், மாதம், 1,100 ரூபாய் என, 12 மாதத்திற்கு, 13,200 ரூபாய் செலுத்தினால், 13வது மாதத்தில், 26,400 ரூபாய்க்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என, 1,000 பேரிடம் பணம் வசூலித்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பணம் கட்டியவர்கள், அவரது மளிகை கடைக்கு சென்று பொருட்களை கேட்டபோது, இன்னும் ஓரிரு நாட்களில் தருவதாகக் கூறினர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக கடை மூடியிருந்ததால், அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடும் பூட்டப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் அவர்கள் தலைமறைவாகி னர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

