sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உலகளந்த பெருமாள் கோவில் மூலவருக்கு தைலக்காப்பு விழா

/

உலகளந்த பெருமாள் கோவில் மூலவருக்கு தைலக்காப்பு விழா

உலகளந்த பெருமாள் கோவில் மூலவருக்கு தைலக்காப்பு விழா

உலகளந்த பெருமாள் கோவில் மூலவருக்கு தைலக்காப்பு விழா


ADDED : ஜூலை 11, 2011 11:12 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவருக்கு ஜேஸ்டாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு பெருமாள் 15 நாட்களுக்கு திருமுக சேவையில் அருள் பாலிக்கிறார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாளுக்கு இன்று (12 ம் தேதி) தைலக்காப்பு எனப்படும் ஜேஸ்டாபிஷேகம் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு மகா சாந்தி ஹோமம், 10 மணிக்கு தைல பிரதிஷ்டை, 10.30 மணிக்கு சந்தனாதி தைலம் மூலவருக்கு சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.



புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் சிறப்பு மகா சாந்தி திருமஞ்சனம், மகா பூர்ணாகுதி, நான்காயிர திவ்யபிரபந்த சேவை சாற்று மறை நடக்கிறது. இன்று முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு பெருமாள் திருமுக மண்டல சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us