ADDED : ஆக 07, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் மலை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
மயிலம் மலையடிவாரத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு 9 நாள் திருவிழா கடந்த ஜூலை 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் வழிபாடு மகா தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் அக்னி தீர்க்க குளத்திலிருந்து108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தது அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.