sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை

/

போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை

போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை

போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை


ADDED : ஜூன் 30, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் பட்டப்பகலில் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் முரளிதரன்,55; பாவந்துார் கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி மாலதி,50; சித்தானங்கூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.

இருவரும் நேற்று காலை 9:30 மணிக்கு வீட்டை பூட்டி கொண்டு பணிக்குச் சென்றனர். மதியம் 2:00 மணியளவில் மாலதி வீட்டிற்கு வநதபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், ெஹல்மெட் அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us