/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி பஸ் மீது அரசு பஸ் மோதியதில் 17 பேர் காயம்
/
பள்ளி பஸ் மீது அரசு பஸ் மோதியதில் 17 பேர் காயம்
ADDED : செப் 16, 2024 11:42 PM

விக்கிரவாண்டி: விழுப்புரம் தனியார் பள்ளி மாணவர்கள், பேரணி என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அதே கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் புறப்பட்டனர்.
பஸ்சை, விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் டேனியல், 30, ஓட்டினார். காலை, 9:30 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சந்திப்பில், போக்குவரத்து சிக்னலுக்காக அந்த பள்ளி பஸ் நின்றது.
அப்போது, அதே வழித்தடத்தில், விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், சிக்னலுக்காக நின்றிருந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது.
இதில், பள்ளி பஸ் முன்னால் நின்ற இரண்டு கார்கள் மீது மோதியது. இதனால், பஸ்சில் இருந்த மாணவர்கள் காயம் அடைந்து அலறினர். அங்கிருந்தவர்கள் மாணவர்களை மீட்டனர்.
விபத்தில், ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் 15 பேர் மற்றும் அரசு பஸ் பயணியர் இருவர் என, 17 பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்து காரணமாக, வடக்கு பைபாஸில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ் டிரைவர், நரையூர் சிவா, 48, மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.