/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு
/
வானுார் அரசு கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 14, 2024 06:54 AM

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி யில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் 2024-25ம் ஆண்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.
வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது.
சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வின்பேது, சேர்க்கைக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.