ADDED : மார் 04, 2025 12:09 AM

விழுப்புரம்,;விழுப்புரத்தில் விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், சண்முகம் மற்றும் போலீசார் நேற்று ஜானகிபுரம் ரவுண்டானா அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 43; என்பவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 90 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் இவர், விழுப்புரம் பாகர்ஷா வீதியை சேர்ந்த சம்சுதீன் மகன் அன்வர் அலி, 58; என்பவர் விற்பனை செய்வதற்கு கொடுத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சங்கர், அன்வர் அலி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.