ADDED : செப் 02, 2024 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பள்ளியநேலியனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே கஞ்சா விற்ற திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர் கணேசன் மகன் விஜயகுமார், 20; சென்னை, பாரிமுனை சத்யா நகர் திருநங்கை கோமதி, 22; ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.