sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்று நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

/

கிணற்று நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கிணற்று நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கிணற்று நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


ADDED : ஆக 03, 2024 11:16 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராகவன், 7; அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஜெய்சரண், 10; தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இருவரும் நேற்று பிற்பகல், 3:00 மணியளவில் புலிவந்தி சாலையில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். வழக்கமாக கிணற்றுக்கு மேலே உள்ள தொட்டியில் குளிப்பவர்கள், நேற்று தொட்டியில் தண்ணீர் இல்லாததால் கிணற்றில் இறங்கி படிக்கட்டில் அமர்ந்து குளித்தனர். அப்போது இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தேடியபோது இருவரும் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அன்னியூர் தீயணைப்பு படையினர் விரைந்து ராகவன், ஜெய்சரண் உடல்களை மீட்டனர். அனந்தபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us