ADDED : ஜூன் 30, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் தொட்டிக்குடிசை கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டி.புதுப்பாளையம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற ரமேஷ், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.