sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்

/

காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்

காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்

காரில் மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது: கார் பறிமுதல்


ADDED : மே 01, 2024 01:34 AM

Google News

ADDED : மே 01, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை காரில் கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் ரயில்வே கேட் அருகே விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12:00 மணிக்கு, அந்த வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் வந்த 2 பேரை பிடித்து, அவர்களிடமிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கோயம்புத்துார், சரவணாதி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் பூபதி, 24; திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கொள்ளைப்பட்டி காலனியைச் சேர்ந்த ராஜ் மகன் பிரேம்குமார், 28; என்பதும், இவர்கள், புதுச்சேரியிலிருந்து, மதுபாட்டில்களை வாங்கிச் சென்று, கோயம்புத்துாரில் உள்ள வாடகை கார் டிரைவர்களிடம் விற்பதற்காக எடுத்துச்சென்றது தெரிய வந்தது.

கடத்தல் மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், வழக்குப் பதிந்து, பூபதி, பிரேம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us