நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை வழுதரெட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வழுதரெட்டி ஏரிக்கரையில், விழுப்புரம் மேல்தெருவைச் சேர்ந்த் விஜயகுமார், 37; நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், 48; விக்னேஷ், 35; விழுப்புரம் சாலாமேடு சுகுமார், மகேஷ் ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.2,100 பணம் மற்றும் சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து, அதில், விஜயகுமார், வடிவேல் ஆகியோரை கைது செய்தனர்.

