/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது
/
பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது
ADDED : மே 03, 2024 11:58 PM
திண்டிவனம் : திண்டிவனத்தில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த பனங்குப்பம், தோப்பு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ப்பிரியன், 35; இவர், நேற்று காலை 10:00 மணியளவில், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்திலிருந்து, பஸ் ஏற முயன்றார். அப்போது, அவர் பாக்கெட்டிருந்த 500யை 2 பெண்கள் பிக்பாக்கெட் அடித்தனர். உடன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியைச் சேர்ந்த சூரியா மனைவி மவுலியா, 22; அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி அலமேலு, 40; என தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்ஐ கைது செய்தனர்.