sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி மோசடி செய்த 4 பேர் கைது: 2 பேருக்கு வலை

/

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி மோசடி செய்த 4 பேர் கைது: 2 பேருக்கு வலை

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி மோசடி செய்த 4 பேர் கைது: 2 பேருக்கு வலை

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி மோசடி செய்த 4 பேர் கைது: 2 பேருக்கு வலை


ADDED : ஜூன் 19, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:போலி ஆவணங்களை பயன்படுத்தி, மொபைல் போனுக்கான 'சிம்' கார்டுகளை வாங்கி இணையதளம் வாயிலாக பணமோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் வெண்ணி, 21. இவரிடம், விக்கிரவாண்டியை சேர்ந்த நண்பர்கள், தாங்கள் 'டெலிகாலிங்' வேலை செய்ய உள்ளதாகவும், அதற்கு 'சிம் கார்டுகள்' தேவைப்படுவதாகவும் கூறி, அவரது ஐ.டி., புரூப் மூலம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு கடையில் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கினர்.

பின்னர் அந்தக் கும்பல், வெண்ணிக்கு தெரியாமல், அவரது ஆதார் கார்டு மற்றும் கைரேகையை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட 'சிம்கார்டுகளை'பிற கடைகளில் வாங்கினர்.

இதுகுறித்து வெண்ணி கொடுத்த புகார்படி, விழுப்புரம் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வெண்ணியின் ஆவணங்களை பயன்படுத்தி, 'சிம் கார்டு' வாங்கியவர்கள் இணையதளம் வாயிலாக மோசடி செய்து வருவதைக் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து வெண்ணியின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கி மோசடி செய்த விக்கிரவாண்டி அடுத்த சித்தணி மாரியம்மன் கோவில் தெரு ராஜ், 29; அன்பரசு, 29; போத்தியம்மன் கோவில் தெரு சதீஷ்குமார், 24; தமிழ்ச்செல்வன், 28; ஆகிய நான்கு பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் தொடர்புள்ள சத்தியமூர்த்தி,30, கிருபா, 32; ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us