sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு திருட முயன்ற 4 பேர் கைது

/

ஆடு திருட முயன்ற 4 பேர் கைது

ஆடு திருட முயன்ற 4 பேர் கைது

ஆடு திருட முயன்ற 4 பேர் கைது


ADDED : ஆக 30, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே அதிகாலையில் ஆடு திருட வந்த 4 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 57; விவசாயி. இவர், தனக்கு சொந்தமான 5 வெள்ளாடுகளை வீட்டருகே நேற்று முன்தினம் இரவு கட்டியிருந்தார்.

நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பைக்குகளில் வந்த 4 பேர், 5 ஆடுகளை திருடி எடுத்துச் செல்ல முயன்றனர்.

சத்தம் கேட்டு எழுந்த மணி, கிராம மக்கள் உதவியுடன் 4 பேரையும் பிடித்து, ரோஷணை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திண்டிவனம், செஞ்சி ரோட்டைச் சேர்ந்த அர்ஜூன், 19; ஜாசிம் பாஷா, 20; கரியன் தெருவைச் சேர்ந்த ஜெகநாத், 19; மேல்பாக்கம் 16 வயது சிறுவன், என தெரியவந்தது. உடன் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us