/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்
/
மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்
மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்
மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்
ADDED : செப் 15, 2024 07:23 AM

பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானதை தொடர்ந்து, அப்பகுதியில் ஒரு பக்க சாலை மூடப்பட்டது.
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லுார் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் சாலை இரு பக்கமும் இன்னும் போடப்படாமல் உள்ளது. ஆனால், நான்குவழி சாலையில் கடந்த மாதம் முதல் போக்குவரத்து இயக்கப்பட்டது.
பு.முட்லுார் மேம்பாலம் அருகே சாலையை குறுக்கிடும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்து நடப்பது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த மாதம் 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி பு.முட்லுார் மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில், 5 பேர் இறந்தனர்.
இதன் எதிரொலியாக, பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் ஒரு பக்க சாலையில் தடுப்பு கட்டைகள் வைத்து மூடப்பட்டது. இதனால், சிதம்பரத்தில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் அருகே சர்வீஸ் சாலை வழியாக சென்று, பழைய எம்.ஜி.ஆர்., சாலை வழியாக கடலுார் செல்கின்றன.