sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்

/

மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்

மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்

மேம்பாலத்தில் 5 பேர் பலி எதிரொலி; சிதம்பரம் அருகே ஒரு பக்க சாலை மூடல்


ADDED : செப் 15, 2024 07:23 AM

Google News

ADDED : செப் 15, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானதை தொடர்ந்து, அப்பகுதியில் ஒரு பக்க சாலை மூடப்பட்டது.

விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லுார் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் சாலை இரு பக்கமும் இன்னும் போடப்படாமல் உள்ளது. ஆனால், நான்குவழி சாலையில் கடந்த மாதம் முதல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

பு.முட்லுார் மேம்பாலம் அருகே சாலையை குறுக்கிடும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்து நடப்பது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த மாதம் 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி பு.முட்லுார் மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில், 5 பேர் இறந்தனர்.

இதன் எதிரொலியாக, பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் ஒரு பக்க சாலையில் தடுப்பு கட்டைகள் வைத்து மூடப்பட்டது. இதனால், சிதம்பரத்தில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் அருகே சர்வீஸ் சாலை வழியாக சென்று, பழைய எம்.ஜி.ஆர்., சாலை வழியாக கடலுார் செல்கின்றன.






      Dinamalar
      Follow us