sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுார் அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது; நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள் பறிமுதல்

/

வானுார் அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது; நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள் பறிமுதல்

வானுார் அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது; நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள் பறிமுதல்

வானுார் அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது; நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள் பறிமுதல்


ADDED : ஜூலை 22, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே முயல் மற்றும் பறவைகளை வேட்டையாட முயன்ற 6 பேரை திண்டிவனம் வனத்துறையினர் கைது செய்து, நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சிலர் முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஒழிந்தியாப்பட்டு - கீழ்புத்துப்பட்டு சாலையில் மாத்துார் சந்திப்பில் பறவைகளை வேட்டையாட முயன்ற 6 பேர், வனத்துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் புதுச்சேரி கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்திவேல், 22; அர்ஜூனன், 21; மணிகண்டன், 21; விஜயகுமார், 19; விஜய், 20; பிரகாஷ், 21; என்பதும், வானுார் மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும், விவசாய நிலப்பரப்பிலும், முயல்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 250 கிராம் வெடி மருந்து, 200 கிராம் வெடி மருந்து நிரப்பிய தோட்டாக்கள் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us