/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு வாடகை எடுத்து சூதாட்டம் 9 பேர் கைது; பணம், பைக்குகள் பறிமுதல்
/
வீடு வாடகை எடுத்து சூதாட்டம் 9 பேர் கைது; பணம், பைக்குகள் பறிமுதல்
வீடு வாடகை எடுத்து சூதாட்டம் 9 பேர் கைது; பணம், பைக்குகள் பறிமுதல்
வீடு வாடகை எடுத்து சூதாட்டம் 9 பேர் கைது; பணம், பைக்குகள் பறிமுதல்
ADDED : ஆக 06, 2024 07:21 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாம்பழப்பட்டில், வீடு வாடகை எடுத்து, சூதாட்டம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இந்திரா நகர் அடுத்த ஸ்டாலின் நகரில் சின்னதுரை,51; என்பவர் வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் மோகன்ராஜ்,29; நாவம்மாள், 60; ஜி.ஆர்.பி. தெரு சம்பா,50; நன்னாடு புதுகாலனி வடிவேல், 43; புதுச்சேரி அடுத்த திருக்கனுார் ஸ்ரீகாந்தி,30; ஏனாதிமங்கலம் சிவா,37; பாப்பான்குளம் சையத் தாகீர் மகன் ஜாகீர்,25; விழுப்புரம் காலேஜ் ரோடு முனியன் மகன் ரஞ்சித்,22; விராட்டிக்குப்பம் பாபு மகன் மகேஷ்,22; என தெரியவந்தது.
இதுதொடர்பாக விழுப்புரம் போலீசார் வழக்கு பதிந்து 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 59 ஆயிரத்து 530 ரூபாய், 4 பைக்குகள், சூதாட்ட தாள்கள் 100 கட்டு, 9 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான சின்னதுரையை தேடி வருகின்றனர்.