/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் ரூ.90 லட்சம் காணிக்கை
/
அங்காளம்மன் கோவிலில் ரூ.90 லட்சம் காணிக்கை
ADDED : செப் 01, 2024 04:57 AM

செஞ்சி, : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக 90 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் காலை துவங்கி இரவு வரை நடந்தது.
இதில் 90 லட்சத்து 95 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கம், 148 கிராம் தங்க நகைகளும், 1,150 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ், அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.