/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
/
கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 27, 2024 05:20 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கடன் பணத்தை கேட்டு பெண்ணை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அருகே பாணாம்பட்டு இ.பி.காலனியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 53; இவர், கே.கே.ரோடு ரகிம்லே அவுட்டைச் சேர்ந்த கோவிந்தன்,55; என்பவரிடம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.8.50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை தராததால், கடந்த 24ம் தேதி, சக்கரபாணி வீட்டிற்கு சென்ற, கோவிந்தன் மகன் செல்வம், 34; அவரது நண்பர் சக்திவேல்முருகன், 36; ஆகியோர், அங்கிருந்த சக்கரபாணியின் மனைவி சித்ரா,50; என்பவரிடம், கொடுத்த கடனை திருப்பி கேட்டு, தகராறு செய்து, திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் செல்வம், சக்திவேல்முருகன் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.