/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
/
பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 17, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே போலீசில் புகாரளித்த பெண்ணை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சரண்ராஜ், 28; இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்த, அந்த சிறுமியின் தாயிடம், சரண்ராஜின் அண்ணன் சத்தியராஜ், 30; நேற்று முன்தினம் நேரில் சென்று, திட்டி தகராறு செ ய்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் சத்தியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.