/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் பயணித்தவர் மாரடைப்பால் பலி
/
பஸ்சில் பயணித்தவர் மாரடைப்பால் பலி
ADDED : ஜூலை 17, 2024 12:47 AM
விக்கிரவாண்டி : அரசு பஸ்சில் பயணித்த வாலிபர் மாரடைப்பால் இறந்தார்.
கள்ளக்குறிச்சி காட்டு காலனி, வடமருதுாரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 26; இவர், சென்னை அம்பத்துாரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை தனது ஊரான கள்ளக்குறிச்சிக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார்.
மதியம் 1:00 மணிக்கு விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தையில் உள்ள ஓட்டலில் பஸ் நின்றது. அப்போது, பஸ்சில் இருந்து இறங்கி குளிர்பானம் வாங்கி குடித்தவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.