/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு
/
சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு
ADDED : மே 06, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், அரசு அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுற்றுலா மாளிகை உள்ளே 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.
இதனையறிந்த ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் ஷாஜகான் உள்ளிட்டோர் நேரில் சென்று, சாரை பாம்பை பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டனர்.