ADDED : செப் 06, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே விஷப்பூச்சி கடித்ததில் வாலிபர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் சந்துரு, 17; இவர், கடந்த 2ம் தேதி இரவு, அவரது வீட்டின் அருகே துாங்ய போது வாயிலிருந்து நுரை வந்துள்ளது.
விஷ பூச்சி அல்லது பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விஷ கடிக்கான சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.