ADDED : ஆக 29, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து நிலை தடுமாறி விழுந்த வாலிபர் இறந்தார்.
விழுப்புரம், வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் சையது சலீம் மகன் சையதுசுனில், 28. இவர், கடந்த 28ம் தேதி, மந்தக்கரை பகுதியை சேர்ந்த தனது நண்பரான பன்னீர்செல்வம் மகன் மாணிக்கம், 28; என்பவருடன், பைக்கில் சென்றார்.
பைக்கை சையதுசுனில் ஓட்டினார். இவர்கள், புதுச்சேரி மார்க்கத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்தபோது, சாலைஅகரம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி சையதுசுனில் இறந்தார். விபத்து குறித்து, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.