ADDED : ஜூலை 04, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 10:45 மணியளவில் பையூரில் இருந்து திருக்கோவிலுார் - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் டிஸ்கவர் பைக்கில் சென்றார். சின்னசெவலை கிராம பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.