/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : மார் 02, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அடுத்த ஒட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தவபுத்திரன் மகன் சுரேஷ், 35; தனியார் மெடிக்கலில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 24ம் தேதி இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு பைக்கில் மயிலம் ரோடு வழியாக சென்றார்.
வானுார் அருகே பொலிரோ வேன் பைக் மீது மோதியதில், சுரேஷ் படுகாயமடைந்தார். உடன், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.