/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : செப் 10, 2024 06:57 AM
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் கடந்தாண்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதுாறாக பேசியதாக அவர் மீது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் உத்தரவு வரும் வரை வழக்கை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டி மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டி ஏற்கனவே தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.