sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது

/

அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது

அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது

அ.தி.மு.க., நிர்வாகி கொலை தி.மு.க., பிரமுகர் கைது


ADDED : ஜூன் 23, 2024 05:43 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறில் பஞ்சாயத்து செய்ததால் ஏற்பட்ட விரோதத்தில் கட்டையால் அடித்து அ.தி.மு.க., நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் கோபிநாத், 28; திருமணமாகாதவர். அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர். அதே ஊரைச் சேர்ந்தவர் தி.மு.க.,1வது வார்டு செயலாளர் ஆறுமுகம் மகன் தியாகு, 38; இருவரும் நண்பர்கள்.

தியாகுவின் மனைவி மாற்றுத்திறனாளி, கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனை கோபிநாத் தலையிட்டு பஞ்சாயத்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 20ம் தேதி தியாகுவின் பாட்டி தனலட்சுமி வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற கோபிநாத், தியாகுவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தியாகு, கோபிநாத்தை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கோபிநாத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

இதுகுறித்து கோபிநாத்தின் தாய் கீதா, 57; கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தியாகுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us