sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓட்டுச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள் ஒதுக்கீடு: கலெக்டர் தலைமையில் இரண்டாம் கட்ட சுழற்சி

/

ஓட்டுச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள் ஒதுக்கீடு: கலெக்டர் தலைமையில் இரண்டாம் கட்ட சுழற்சி

ஓட்டுச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள் ஒதுக்கீடு: கலெக்டர் தலைமையில் இரண்டாம் கட்ட சுழற்சி

ஓட்டுச்சாவடி மையங்களுக்கான இயந்திரங்கள் ஒதுக்கீடு: கலெக்டர் தலைமையில் இரண்டாம் கட்ட சுழற்சி


ADDED : ஏப் 09, 2024 05:27 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் 1,732 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட சுழற்சி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சட்டசபை தொகுதி வாரியாக தேர்வு செய்வதற்கான கணினி முறையில் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் முதல் கட்ட சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த மார்ச் 23ம் தேதி நடந்தது.

தற்போது விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியின் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - வி.சி., - பா.ம.க., - நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 17 பேர் உள்ளனர்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி பணி நேற்று நடந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஜ்ஜியால் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலை, கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர் முகவர்களிடம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, 6 சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பியுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் கொண்ட பேலட் பேப்பர் ஒட்டப் படும். பின், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகளும் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஆர்.டி.ஒ., காஜா ஷாகுல் அமீது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us