/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 09, 2024 04:15 AM
விழுப்புரம், : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பூத்களில் ஓட்டுப்பதிவு நாளில் பணிபுரிய உள்ள தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கான பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார் வையாளர் அமித்சிங் பன்சால் முன்னிலை வகித்தார்.
இதில், விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் தொகுதியில் உள்ள 276 பூத்களில், பணிபுரிய உள்ள 1,355 பூத் தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 53 நுண் பார்வையாளர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.