/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளபரமேஸ்வரி கோவில் தேரோட்டம்
/
அங்காளபரமேஸ்வரி கோவில் தேரோட்டம்
ADDED : மார் 04, 2025 09:43 PM

விழுப்புரம் : வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
கோவிலில், 246வது ஆண்டு பிரமோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது.
தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
ஏற்பாடுகளை தர்மகர்த்தா கலிவரதன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், குமாரபுரி பொது மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று 5ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12ம் தேதி இரவு மகா கும்ப படையல் நடக்கிறது.