sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

/

சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஆக 04, 2024 11:23 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை.

கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் அரசு சார்பில் நல உதவி வழங்கப்படுகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஏற்கனவே, உறுப்பினராக பதிவு செய்தோர், தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us