sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருமண ஊர்வலத்தில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

/

திருமண ஊர்வலத்தில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

திருமண ஊர்வலத்தில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

திருமண ஊர்வலத்தில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு


ADDED : செப் 09, 2024 05:41 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமண விழா ஊர்வலத்தில் போதை நபர் தாக்கியதில் வாலிபர் மண்டை உடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வி.புதுாரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 28; இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது, பெண் அழைப்பு ஊர்வலத்தில் அதே ஊரைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர், குடிபோதையில் நடனமாடினார்.

மேலும் அங்குள்ளவர்களிடம் போதையில் பிரச்னை செய்ததால், தட்டிக்கேட்ட அஜித்குமார் என்பவரை விமல்ராஜ் சரமாரியாக தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் மண்டை உடைந்த அஜித்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், விமல்ராஜ் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us