sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது

/

போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது

போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது

போலீசாருக்கு மிரட்டல் ஆசாமி கைது


ADDED : மே 26, 2024 05:30 AM

Google News

ADDED : மே 26, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: வானூர் அருகே பொது இடத்தில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வானூர் சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, கரசானூர் பஸ் நிறுத்தம் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது பைக்கை சாலையில் நிறுத்தி விட்டு, அவ்வழியாக சென்ற பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்துள்ளார்.

இதனை ரோந்து சென்ற போலீசார் கண்டித்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்கார்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், கரசானூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us