/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம்
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம்
வெங்கடேச பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம்
வெங்கடேச பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம்
ADDED : மே 20, 2024 05:53 AM

மயிலம் : வைரம் பேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த வைரம் பேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் நூதன ஆலய அஷ்ட பந்தன கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி மாலை எஜமானர் சங்கல்பம் பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை மற்றும் முதல் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கும்ப ஆராதனம், அக்னி பிரணாயனம், தொடர்ந்து அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், இரண்டாம் கால பூஜையும், இரவு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.
நேற்று காலை நான்காம் கால பூஜையும், பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது. யாத்ரா தானம், தசதானம், கும்பம் புறப்பாட்டை தொடர்ந்து விமான கும்பாபிஷேகமும்,
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர், லட்சுமி வராகம், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய மூலவர்களுக்கு சம்ப்ரோஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

