sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாய்க்காலை துார் வாராததால் சாக்கடை நீர் சாலையோரம் வழிந்து செல்லும் அவலம் திண்டிவனம் நகராட்சியின் மெத்தனம்

/

வாய்க்காலை துார் வாராததால் சாக்கடை நீர் சாலையோரம் வழிந்து செல்லும் அவலம் திண்டிவனம் நகராட்சியின் மெத்தனம்

வாய்க்காலை துார் வாராததால் சாக்கடை நீர் சாலையோரம் வழிந்து செல்லும் அவலம் திண்டிவனம் நகராட்சியின் மெத்தனம்

வாய்க்காலை துார் வாராததால் சாக்கடை நீர் சாலையோரம் வழிந்து செல்லும் அவலம் திண்டிவனம் நகராட்சியின் மெத்தனம்


ADDED : ஜூலை 12, 2024 11:06 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில், பள்ளிகள் உள்ள பகுதியில் சாலையோரம் சாக்கடை கழிவு நீர் செல்வதால் பொது மக்களுக்கு சீர்கேடுகள் ஏற்படுகின்றது. திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், ஜெயபுரம் ரவுண்ட்டான எதிரில் வணிக வளாகம் உள்ளது. இதற்கு பின்புறம் மாண்ட் போர்ட் பள்ளி, புனித அன்னாள் பள்ளி உள்ளது. வணிக வளாகத்தின் முன்பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாக்கடை கழிவு நீர் வெளியேறி, புதுச்சேரி செல்லும் சாலையில் வழிந்தோடுகின்றது. இதுபற்றி அந்தப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து பல நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இந்தப்பகுதியில் தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் வாய்க்காலிலுள்ள அடைப்புகளை எடுத்தால்தான், கழிவு நீர் சாலையோரம் செல்லாமல் இருக்கும்.

பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் வாய்க்காலிலுள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us