/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் வளையல் திருவிழா
/
சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் வளையல் திருவிழா
ADDED : ஜூலை 22, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெரு, சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில், ஆடிமாதத்தையொட்டி வளையல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து அலங்காரம் செய்து, வளையல் பூஜை நடந்தது. 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.