/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மோதி விபத்து வங்கி பெண் ஊழியர் பலி
/
பைக் மோதி விபத்து வங்கி பெண் ஊழியர் பலி
ADDED : ஜூன் 04, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில், நடந்து சென்ற வங்கி பெண் ஊழியர் மீது பைக் மோதி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பீராணிஷா மனைவி ைஹரூன்பீ, 34; ஸ்டேட் பாங்கில் வணிக தொடர்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் அவரப்பாக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றவர், செஞ்சி ரோடு, பாண்டியன் மரவாடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ைஹரூன்பீ மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ைஹரூன்பீ முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
புரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.