/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மைல் கல்லில் பைக் மோதல்; மொபைல் கடை ஊழியர் பலி
/
மைல் கல்லில் பைக் மோதல்; மொபைல் கடை ஊழியர் பலி
ADDED : மே 08, 2024 11:55 PM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே நள்ளிரவில் சாலையோர மைல் கல்லில் பைக் மோதி, மொபைல் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் போலீஸ் சரகம் கொடுக்கூர் காலனியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் சுந்தர், 22; புதுச்சேரியில் மொபைல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (7ம் தேதி) இரவு பணி முடிந்து தனது யமாஹா பைக்கில் பத்துக்கண்ணு வழியே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 11:30 மணிக்கு வழுதாவூர் அடுத்த குமாரபாளையம் அருகே சென்றபோது சாலையோரம் உள்ள மைல்கல் மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. படுகாயம் அடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.