ADDED : ஜூன் 26, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் ஒருவர் இறந்தார்.
அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் வேடி, 50; விவசாயி. இவர் ் நேற்று முன்தினம் இரவு 8;00, மணிக்கு அவலுார்பேட்டையிலிருந்து கோவில்புரையூரில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.