/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல்: 8 பேர் மீது வழக்கு
ADDED : மே 07, 2024 05:38 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதல் காரணமாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி முத்துலட்சுமி, 49; ஊராட்சித் தலைவர்.
இவர், அந்த பகுதியில், ஊரக வளர்ச்சிதிட்டத்தின் கீழ் 100 மீட்டர் துாரத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைத்து வருகின்றார்.
அந்த சாலையை தங்கள் வீடுவரை நீடித்து, அமைக்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை, 48; குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலை பணியை நீட்டிக்க முடியாது என கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர்.
இதில், நாகராஜன், தங்கதுரை உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், தங்கதுரை, 48; அவரது மகன் மிதுன்ராஜ், 19; மனைவி அஞ்சலைதேவி, 42; உறவினர் ராஜேந்திரன், 58; ஆகியோர் மீதும், மனோகரன், 29; பாபுராஜ், 35; சந்திரன், 25; நாகராஜன், 55; ஆகியோர் மீதும், காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.