/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
/
பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : மார் 27, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
திண்டிவனம் மாரிசெட்டிக்குளம், வெள்ளவாரி வாய்க்கால் தெருவில் வசித்தவர் அருள்முருகன்,47; இவர் ஸ்காடர் நகர் அருகே பிரியாணி கடை வைத்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் கடையிலிருந்து வீட்டிற்கு சென்று, குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.