ADDED : ஜூலை 02, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். பெயிண்டர். இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு அருகில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல விஷேசத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.
அங்கு சிறுவர்களுக்கு பாப்கார்ன் கொடுத்தனர். அதனை வினோத்தின் மகன் மோத்தீஷ்,5; வாங்க சென்றார்.
அப்போது அவர், பாப்கார்ன் மிஷின் பிளக்கை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.